• Sun. May 10th, 2026

24×7 Live News

Apdin News

மேற்கு வங்கத்தில் முதன் முறையாக பாஜக ஆட்சி – முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு

Byadmin

May 10, 2026


மேற்கு வங்கம், மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ், பாஜக

பட மூலாதாரம், ANI

மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அந்த மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் இவர் ஆவார்.

பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல பாரதிய ஜனதா தலைவர்கள் முன்னிலையில், அவர் வங்காள மொழியில் பதவியேற்றார்.

சுவேந்து அதிகாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று காலையில், “இது மேற்கு வங்கத்திற்கு உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க காலைப்பொழுதாகும். தொலைநோக்குச் சிந்தனையாளரான தலைவர், பிரதமர் நரேந்திர மோதியை ‘மகிழ்ச்சியின் நகரத்திற்கு’ (City of Joy) வரவேற்பது பெருமையும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு தருணமாகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், மேற்கு வங்கத்தில் அமையப்பெறும் முதல் பாஜக அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவை இன்று நாம் காணும்போது, ​​நமது தேசத்தை உருவாக்கிய முன்னோடிகளின் கனவுகள் நனவாவதை நாம் காண்கிறோம்.” என்று பதிவிட்டிருந்தார்.

“வரவேற்கிறோம், பிரதமரே,” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையைத் தகர்த்து பாஜக ஆட்சியைப் பிடிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அந்தப் பெருமை பெரிய அளவில் சுவேந்து அதிகாரியையே சாரும்.

By admin