• Mon. May 11th, 2026

24×7 Live News

Apdin News

மேற்கு வங்கம்: மமதா பானர்ஜியின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?

Byadmin

May 11, 2026


மேற்கு வங்கம்: மமதா பானர்ஜியின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்? மீண்டு வருவாரா?

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசியலின் வரலாற்றில் பல வலிமையான பெண் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில், ஜெயலலிதா, மாயாவதி, மமதா பானர்ஜி ஆகிய மூன்று பெயர்கள் தனித்து நிற்கின்றன. இந்தத் தலைவர்கள் வலுவான பிராந்திய தளங்களில் இருந்து தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கி இருந்தாலும், பிற்காலத்தில் தேசிய அளவிலான அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.

உறுதிப்பாடு, வலிமையான தலைமைத்துவம், தங்களுக்கு வாக்களித்த மக்களுடனான நெருங்கிய பிணைப்பு ஆகியவற்றின் மூலம் இவர்கள் சக்திவாய்ந்த அரசியல் ஆளுமைகளாக உருவெடுத்தனர்.

ஒரு காலகட்டத்தில் பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த அரசியல் களத்தில், இவர்கள் தங்கள் தனித்துவமான முத்திரையைப் பதித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய வலிமையின் அடையாளங்களாகத் திகழ்ந்தனர்.

கடந்த 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா மறைந்த பிறகும், அண்மைய ஆண்டுகளில் மாயாவதியின் அரசியல் செல்வாக்கு சற்று குறைந்திருக்கும் சூழலிலும், இந்திய அரசியல் களத்தில் எஞ்சியிருக்கும் ஒரே முக்கிய பெண் தலைவராக மமதா பானர்ஜி கருதப்பட்டார்.

அவர்கள் விட்டுச் சென்ற அரசியல் மரபை முன்னெடுத்துச் செல்பவராகவே அவர் பெரும்பாலும் பார்க்கப்பட்டார். இருப்பினும், அண்மையில் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, வலிமையான பெண் தலைவர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

By admin