• Tue. May 13th, 2025

24×7 Live News

Apdin News

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் – பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு

Byadmin

May 13, 2025


ஐபிஎல், பிசிசிஐ,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இடை நிறுத்தம் செய்யப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட, நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாடு முழுவதும் 6 மைதானங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அரசு மற்றும் பாதுகாப்பு முகமைகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் நடத்தப்பட்ட நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, நடப்பு தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக பிசிசிஐயின் அறிக்கை கூறுகிறது.

எஞ்சிய 17 போட்டிகள் இந்தியாவின் 6 இடங்களில் நடைபெறும், மே 17ம் தேதி போட்டிகள் தொடங்கி ஜூன் 3 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான கால அட்டவணை கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • குவாலிஃபயர்1 போட்டி – மே29ம் தேதி
  • எலிமினேட்டர் போட்டி – மே 30ம் தேதி
  • குவாலிஃபயர்2 போட்டி – ஜூன் 1ம் தேதி
  • இறுதிப்போட்டி – ஜூன் 3ம் தேதி

By admin