• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

மொஷின் நக்வி: இந்தியா ஆசிய கோப்பையை இவரிடம் பெற மறுத்தது ஏன்? யார் இவர்?

Byadmin

Sep 30, 2025


இந்திய கிரிக்கெட் அணி, மொஷின் நக்வி, பாகிஸ்தான், அரசியல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 37வது தலைவராக மொஷின் நக்வி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு பரபரப்பான இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றது. ஆனால் இந்திய அணியின் வெற்றியை விட, இந்திய வீரர்கள் கோப்பையைப் பெற மறுத்ததைப் பற்றிய விவாதம்தான் கிரிக்கெட் உலகில் அதிகமாக உள்ளது.

இந்த மறுப்புக்கு பின்னால் உள்ள காரணம் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் மொஷின் நக்வி தான்.

போட்டியை வென்ற பிறகு, பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள இந்திய அணி முன்வராத போது, “இந்திய வீரர்கள் ஏசிசி தலைவர் மொஷின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற வேண்டாம்” என்று முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா கூறினார்.

செய்தி முகமையான ஏஎன்ஐ-யிடம் பேசிய அவர், இதற்கான காரணத்தை விளக்கினார். “மொஷின் நக்வி பாகிஸ்தானின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். அதனால்தான் நாங்கள் அவரிடமிருந்து கோப்பையை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்தோம்” என்றார்.

By admin