• Wed. Feb 12th, 2025

24×7 Live News

Apdin News

மோதி – டிரம்ப் சந்திப்புக்கு முன் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் என்ன?

Byadmin

Feb 12, 2025


நரேந்திர மோதி

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, ஜனவரி 27 அன்று நடந்த தொலைபேசி உரையாடலில் மோதியை அமெரிக்காவுக்கு அழைத்தார் டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவரை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் ஜோர்டான் அரசர் அப்துல்லா ஆகியோர் சந்தித்துள்ளனர். இப்போது, டிரம்பை சந்திக்கவுள்ள நான்காவது சர்வதேச தலைவராகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

அதிபரானவுடன் டிரம்ப் பல நாடுகளின் பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய கூடுதல் வரிகளை அறிவித்தார். இந்தியா மீது இதுவரை தனியாக எந்தவொரு வரியும் விதிக்கப்படவில்லை.. ஆனால், எஃகு மற்றும் அலுமினியம் மீது இறக்குமதி வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்தியாவும் அவற்றை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

டிரம்ப் பல வழிகளில் இந்தியாவை சங்கடப்படுத்தியுள்ளார். ஆனால், மோதி அரசு அவற்றுக்கு மிக எச்சரிக்கையாகவே எதிர்வினையாற்றி வருகிறது.

கடந்த காலங்களில் இந்தியாவை ‘வரி மன்னன்’ என டிரம்ப் அழைத்தார். இந்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் ஆவணங்களின்றி, சட்ட விரோதமாக இருந்ததாக 104 இந்தியர்கள் ராணுவ விமானம் மூலம் அமிர்தசரஸுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுடைய கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது.

By admin