• Tue. Mar 3rd, 2026

24×7 Live News

Apdin News

மோதி திருப்பரங்குன்றம் வந்தபோதும் தீபத்தூண் விவகாரத்தை பெரிதாகப் பேசாதது ஏன்?

Byadmin

Mar 3, 2026


பிரதமரின் திருப்பரங்குன்றம் வருகை: தீபத்தூண் விவகாரத்தை  பெரிதாக முன்னிறுத்தாது ஏன்?

பட மூலாதாரம், https://x.com/NarendraModi

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் சர்ச்சை நீடிக்கும் நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு வந்து சென்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோதி.

ஆனால், மதுரைப் பொதுக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மிகச் சிறிய அளவில் மட்டுமே தொட்டுக் காட்டினார் அவர். திருப்பரங்குன்றம் விவகாரம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாதா?

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம், மதுரை நகரத்தையே பதற்றத்திற்கு உள்ளாக்கி, பிறகு அடங்கியது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதி மதுரைக்கு வருகை தந்து, கோவிலுக்கும் செல்லவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டபோது மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

பிரதமர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் செல்வார் என அறிவிப்பு வந்தவுடனேயே, மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு, “திருப்பரங்குன்றம் மலை, தீபம் தொடர்பாக மத ரீதியான சிக்கல்கள் நீடித்து வருவதால், இந்த வருகை சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம் என்பதால் இது குறித்து பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென” கோரியிருந்தது.

By admin