• Sat. Nov 1st, 2025

24×7 Live News

Apdin News

மோதி விமர்சனம்: தமிழ்நாட்டில் பிகார் மக்கள் மோசமாக நடத்தப்படுகிறார்களா?

Byadmin

Nov 1, 2025


பிகார், பிரதமர் மோதி, திமுக, பாஜக, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

“தமிழ்நாட்டில் பிகாரை சேர்ந்த உழைக்கும் மக்களை தி.மு.க மோசமாக நடத்துகிறது” – பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் நரேந்திர மோதி இவ்வாறாக குற்றம் சுமத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்கள் மீதான வன்மத்தை தேர்தல் அரசியலுக்காக பிரதமர் மோதி வெளிப்படுத்துவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பிரதமர் கூறுவதைப்போல தமிழ்நாட்டில் பிகார் மக்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களா? பிபிசி தமிழிடம் புலம்பெயர் பிகார் மக்கள் கூறியது என்ன?

பிகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. மறுபுறம் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தலைமையில் மகா கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுகின்றன.



By admin