• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

மோதி – ஷி ஜின்பிங்: இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தைக்கு பிறகு வெவ்வேறு கருத்துகளை கூறியது ஏன்? என்ன முரண்பாடு?

Byadmin

Oct 25, 2024


இந்தியா சீனா பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில், மோதியும், ஷி ஜின்பிங்கும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தினர்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இரு தரப்பு பேச்சுவார்த்தைக்காக ஒன்றாக அமர்ந்து பேசிய போது, இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து வலியுறுத்தினர்.

எல்லை தகராறை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சிகளை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

இந்தியாவும் சீனாவும் பழமையான நாகரீங்களாகும், இரு நாடுகளும் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும், எதிரிகளாக அல்ல என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

அதே நேரம், பிரதமர் நரேந்திர மோதி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

By admin