• Sun. Oct 26th, 2025

24×7 Live News

Apdin News

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்? சென்னையில் கனமழை பெய்யுமா?

Byadmin

Oct 26, 2025


மோன்தா புயல், தமிழ்நாடு, சென்னை

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதை காட்டும் வரைபடம். (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து)

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் (அக்டோபர் 25) நேந்றிரவு 11.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 850 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (அக்டோபர் 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, ‘நாளை (அக்.27) காலை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் இது புயலாக உருவெடுக்கும். அதன்பின் இந்தப் புயல் வடமேற்காகவும், பின்னர் வடக்கு-வடமேற்காகவும் நகர்ந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) காலை தீவிரமான புயலாக மாறும். வடக்கு-வடமேற்காக நகரும் இந்தப் புயல் ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் மச்சிலிபட்டினம் மற்றும் கலிங்கபட்டினம் இடையே 28-ஆம் தேதி மாலையோ அல்லது இரவோ கரையைக் கடக்கலாம். அப்போது மணிக்கு 90-100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதன் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டரையும் தொடலாம்.’

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

அக்டோபர் 26

இன்று திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புண்டு.



By admin