• Wed. Feb 4th, 2026

24×7 Live News

Apdin News

‘மோமோஸ் சாப்பிட ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொடுத்த சிறுவன்’ – குடும்பத்தினர் மற்றும் போலீஸார் கூறுவது என்ன?

Byadmin

Feb 4, 2026


உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் வீட்டில் இருந்த சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மோமோஸ் விற்பனையாளர்களுக்குக் கொடுத்ததாகக் கூறுகிறார் அவரது குடும்பத்தினர்.

பட மூலாதாரம், Getty Images

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் வீட்டில் இருந்த சுமார் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மோமோஸ் விற்பனையாளர்களுக்குக் கொடுத்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இந்தச் சிறுவனின் அத்தை தனது அம்மா வீட்டிற்கு வந்திருந்தபோது நகைகள் காணாமல் போனதைக் கண்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து குடும்பத்தினர் 7-ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவனிடம் விசாரித்தபோதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராம்பூர் ஃபேக்டரி காவல் நிலைய அதிகாரி தேவேந்திர குமார் சிங் இதுகுறித்துக் கூறுகையில், மூன்று இளைஞர்கள் அந்த 14 வயது சிறுவனுக்கு அடிக்கடி மோமோஸ் கொடுத்து நண்பர்களாகியுள்ளனர்.

பின்னர் மெல்ல மெல்ல அந்தச் சிறுவனை மூளைச்சலவை செய்து, வீட்டில் இருக்கும் நகைகளைக் கொண்டு வருமாறு வற்புறுத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

By admin