• Wed. May 14th, 2025

24×7 Live News

Apdin News

யார் இந்த 9 குற்றவாளிகள்? – பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தண்டனை பெற்றோரின் பின்னணி

Byadmin

May 14, 2025


பொள்ளாச்சி பாலியல் வழக்கு, கோவை, தீர்ப்பு

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பின், 9 குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

அனைத்திந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட சில பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீர்ப்பு வந்ததும் இனிப்புகளைப் பரிமாறி தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.

வழக்கு பதியப்பட்ட 2019 ஆம் ஆண்டில் இந்த குற்றவாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டபோது, ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டன. தண்டனை பெற்றுள்ள 9 குற்றவாளிகள் யார், இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன? என்பது குறித்து காணலாம்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முதல் குற்றவாளி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு, கோவை, தீர்ப்பு, சபரி ராஜன் என்கிற ரிஸ்வந்த்

பட மூலாதாரம், Special arrangement

படக்குறிப்பு, முதல் குற்றவாளியான சபரி ராஜன் என்கிற ரிஸ்வந்த்

சபரி ராஜன் என்கிற ரிஸ்வந்த் (வயது 34). இவர் பொள்ளாச்சி ஜோதிநகர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரின் மகன். சிவில் இன்ஜினியர். பாதிக்கப்பட்ட பெண்களில் 4 பேர் தந்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் இவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும், 4 ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

By admin