• Fri. Mar 20th, 2026

24×7 Live News

Apdin News

யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!

Byadmin

Mar 20, 2026


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது.

குறித்த குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் வருகை தரும் குறித்த குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரொமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை ஐ.நா பிரதி நிதிகள் குழு எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்பாணம் வருகை தருவதாகவும் யாழ்ப்பாணம் வருகை தரும் குழுவினர் யாழில் பல தமிழ்க் கட்சி களின் தலைவர் களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

By admin