யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும், 268 தாதிய உத்தியோகத்தர்களும் இன்று புதன்கிழமை நியமனம் பெற்று வந்துள்ளார்கள்.
தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்றபோதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும், ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
யாழ். போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.
The post யாழ். வைத்தியசாலைக்கு 208 சிங்களத் தாதியர்கள் நியமனம் (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.