• Mon. Mar 3rd, 2025

24×7 Live News

Apdin News

யுக்ரேன் விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு – ‘தலைமுறைக்கான வாய்ப்பு’ என கூறிய ஸ்டாமர்

Byadmin

Mar 3, 2025


யுக்ரேன் போர், ஐரோப்பிய தலைவர்கள் உச்சி மாநாடு, கியர் ஸ்டாமர், விளாதிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது

யுக்ரேன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்று வருகிறது.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரால் நடத்தப்படும் இந்த உச்சி மாநாடு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றாலும், இதற்கு முன்னதாக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு இதற்கான முக்கியத்துவத்தை கூட்டியிருக்கிறது.

யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், ஐரோப்பிய நாடுகளின் வாய்ப்புள்ள பங்களிப்பு என்ன? மற்றும் அமெரிக்காவுடன் இந்த நாடுகளின் உறவு என்னவாக இருக்கும் என்பவை விவாதிக்கப்பட வாய்ப்புள்ள அம்சங்களாக கருதப்படுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த மாநாட்டை நடத்தும் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர், ஐரோப்பிய தலைவர்களை வரவேற்றார்.

By admin