• Sun. Mar 16th, 2025

24×7 Live News

Apdin News

யேமனின் ஹூதி கிளர்ச்சிக்குழு மீது அமெரிக்கா தாக்குதல் – டிரம்ப் கூறும் காரணம் என்ன?

Byadmin

Mar 16, 2025


யேமன், ஹூதி கிளர்ச்சிக்குழு, அமெரிக்கா, வான் வழித் தாக்குதல், டிரோன் தாக்குதல், செங்கடல், சூயஸ் கால்வாய், வணிகக் கப்பல் போக்குவரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக டிரம்ப் கூறுகிறார்

யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சிக்குழு மீது அமெரிக்கா ”தீர்க்கமான மற்றும் சக்திவாய்ந்த” வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலே இதற்கு காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இரானின் நிதி உதவியோடு, இந்த ஹூதிக்கள் அமெரிக்க விமானத்தின் மீது ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியுள்ளனர், எங்களின் ராணுவத்தையும் கூட்டாளிகளையும் தாக்கியுள்ளனர்” என்று டிரம்ப் தமது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ளார்.

ஹூதி குழுவின் “கடற்கொள்ளை, வன்முறை மற்றும் பயங்கரவாத” நடவடிக்கைகள் ”பில்லியன் டாலர் இழப்பை” ஏற்படுத்தியுள்ளதாகவும், மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், டிரம்ப் கூறியுள்ளார்.

ஹூதியால் இயக்கப்படும் சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ள தகவலின்படி தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும் 101 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

By admin