• Thu. Aug 14th, 2025

24×7 Live News

Apdin News

ரத்த பரிசோதனை இல்லை, ஊசி இல்லை : காசநோய் இறப்புகளை குறைத்து வரும் தமிழ்நாடு

Byadmin

Aug 14, 2025


தமிழ்நாடு, காசநோய் சிகிச்சை, சுகாதாரத் துறை

பட மூலாதாரம், Getty Images

காசநோய் இறப்புகளைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை பின்பற்றும் ஒரு நோய் தீவிரம் கண்டறியும் முறை மிகுந்த பலனளித்து வருகிறது.

ஆய்வகப் பரிசோதனைகள் எதுவும் இல்லாமல், மிக எளிதான ஐந்து விஷயங்களைச் செய்வதன் மூலம் தீவிர காசநோயாளிகளை விரைவில் கண்டறிந்து, உடனடி சிகிச்சை வழங்கி இறப்புகளைத் தடுத்து வருகிறது.

காசநோய் இறப்புகள் பொதுவாக நோய் கண்டறிந்து ஒரு வாரம் முதல் இரண்டு மாதங்களிலேயே அதிகம் நடைபெறுகின்றன. காசநோய் இருக்கிறது என்று கண்டறிந்த பிறகு, அந்த நோயாளிகளுக்கு நோய் தீவிரமாக இருக்கிறதா, இல்லையா என்று வகைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு காசநோய் இறப்பில்லா திட்டத்தின் (Tamil Nadu Kaasanoi Erapilla Thittam – TNKET) கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

என்னென்ன காரணிகள் அளவிடப்படுகின்றன?

பிஎம்ஐ (BMI), காலில் வீக்கம், சுவாச விகிதம், ஆக்சிஜன் அளவு, யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக நிற்கும் திறன் என ஐந்து விஷயங்களை காசநோயாளிகளிடம் பரிசோதிப்பது மூலம் அவர்களுக்கு நோய் தீவிரமாக இருப்பது கண்டறியப்படுகிறது.

By admin