• Wed. Nov 5th, 2025

24×7 Live News

Apdin News

ரபாரி: இந்த சமூகத்தில் மணமகளுக்கு ஆண் வீட்டார்தான் வரதட்சணையாக தங்கம் தர வேண்டும் – விநோத நடைமுறை

Byadmin

Nov 4, 2025


ஹிராபாய் ரபாரி

பட மூலாதாரம், HIRABHAI RABARI

படக்குறிப்பு, பிரசாரத்தைத் தொடங்குவதில் முக்கிய பங்கு வகித்த ஹிராபாய் ரபாரி

    • எழுதியவர், லட்சுமி படேல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

“எங்கள் ரபாரி சமூகத்தில், மணப்பெண்களுக்கு திருமணத்தின் போது கொலுசு மற்றும் சேலை மட்டுமே வழங்குவதே வழக்கமாக இருந்தது. பின்னர் திருமணத்தின்போது, மணமகன் குடும்பத்தினர் மணப்பெண்களுக்கு தங்கத்தை கொடுக்கும் வழக்கத்தைத் தொடங்கினார்கள். இப்போது, ​​குறைந்தது 20 தோலா (ஒரு தோலா = 11.7 கிராம்) தங்கம் கொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, வசதி இல்லாதவர்கள் திருமணத்திற்காக நிலத்தையும் வீடுகளையும் விற்று அல்லது அடமானம் வைத்து தங்கம் வாங்குகிறார்கள். தங்கம் வாங்குவதற்காக கடன் வாங்கி கஷ்டப்படுகிறார்கள். நகை வாங்கிக் கொடுக்க முடியாத சில இளைஞர்களுக்கு திருமணம் நடப்பதில்லை”

மணமகளுக்கு திருமணத்தின் போது தங்க நகைகளை கொடுக்கும் நடைமுறையால் ரபாரி சமூகம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசும் அம்பாபென் ரபாரி இவ்வாறு கூறுகிறார்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருவதால், திருமணத்தின்போது தங்க நகைகள் வழங்கும் பாரம்பரியத்தால் ஏற்படும் சமூக சிக்கல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வருவதாக ரபாரி சமூகத்தினர் கூறுகின்றனர்.

இதனால் சிலர் கடனில் மூழ்குகிறார்கள். தற்போது, வடக்கு குஜராத்தின் ரபாரி சமூகத்தினர் திருமணங்களில் ‘நகையை பரிசாக வழங்கும் நடைமுறையை’ நிறுத்தும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்தப் பிரசாரத்தில் தற்போது, கட்ச், செளராஷ்டிரா, தெற்கு குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரபாரி சமூகத்தினரும் இணைந்துள்ளனர்.



By admin