• Tue. Sep 16th, 2025

24×7 Live News

Apdin News

ரயில் பொது டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அவசியம் ஏன்? – புதிய விதி கூறுவது என்ன?

Byadmin

Sep 16, 2025


ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதி - விழா காலங்களில் டிக்கெட் பெறுவது எளிதாகுமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

‘அக்டோபர் 1 முதல் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது செயலி மூலம் டிக்கெட்டுகளை (General Reserved Tickets) முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்’ என, இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘முதல் 15 நிமிடங்களுக்கு மட்டும் இவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தவறான பயன்பாடுகள் தவிர்க்கப்படும்’ என ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ‘இப்படியொரு நடைமுறை அவசியற்றது’ எனவும் ‘கவுன்டர்களில் நடக்கும் தவறுகளைக் களைய வேண்டும்’ என, ஐ.ஆர்.சி.டி.சி முகவர்கள் கூறுகின்றனர். ரயில்வே அமைச்சகத்தின் புதிய நடைமுறையால் யாருக்குப் பயன்?

இந்திய ரயில்வே அமைச்சகம், கடந்த செப்டம்பர் 15 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், செயலி வழியாக பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் கட்டாயம்’ என அறிவித்துள்ளது.

By admin