• Tue. Sep 9th, 2025

24×7 Live News

Apdin News

ராஜஸ்தான்:இடிந்து போன பள்ளிக்காக வீட்டையே தானமாகக் கொடுத்து குடிசையில் குடியேறிய நபர்

Byadmin

Sep 7, 2025


பள்ளியாக மாறிய மோரு சிங்கின் வீடு

பட மூலாதாரம், Mohar Singh Meena

படக்குறிப்பு, மோரு சிங் பீல் வீட்டில் தொடங்கப்பட்ட பள்ளி

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்க் மாவட்டத்தில் உள்ள பிப்பிளோடி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் கட்டடம் 2025 ஜூலை 25 அன்று இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் ஏழு குழந்தைகள் உயிரிழந்தனர், சுமார் 21 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

சம்பவத்திற்குப் பிறகு குழந்தைகளின் கல்வி நிறுத்தப்பட்டு, கிராம மக்கள் கல்வியை எப்படி தொடர்வது என குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அப்போது கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மோரு சிங் பீல். தானே முன்வந்து இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டை பள்ளிக்கு வழங்கிவிட்டு, தனது எட்டு பேர் கொண்ட குடும்பத்துடன் ஒரு குடிசையில் வசிக்கத் தொடங்கினார்.

By admin