• Tue. Feb 4th, 2025

24×7 Live News

Apdin News

ராஜஸ்தான்: திருமண தகறாறு, மீசையை மழித்ததற்காக ரூ.11 லட்சம் அபராதம் – என்ன காரணம்? எங்கு நடந்தது?

Byadmin

Feb 4, 2025


ராஜஸ்தானில் உள்ள கரௌலி மாவட்ட மகாபஞ்சாயத்து எடுத்த முடிவு தற்போது முக்கியச் செய்தியாக மாறியுள்ளது.

பட மூலாதாரம், BBC/Mohar Singh Meena

படக்குறிப்பு, ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள், கரிரி கிராமப் பிரதிநிதிகளுக்கு ரூ.11 லட்சம் வழங்குகிறார்கள்.

ராஜஸ்தானில் உள்ள கரௌலியின் பெயர் கடந்த சில நாட்களாக செய்திகளில் வந்தது. இதற்கு காரணம் அங்குள்ள மகாபஞ்சாயத்து எடுத்த முடிவுதான் .

ஜனவரி 27 அன்று, கரௌலியின் ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்க மகாபஞ்சாயத்து உத்தரவு பிறப்பித்தது.

மகாபஞ்சாயத்து என்பது ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களின் தலைமையில் கூடும் கூட்டம் ஆகும்.

ரோன்சி கிராமத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கரிரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை அவமதித்து, அதன் உறுப்பினர்களில் ஒருவரின் மீசை மற்றும் முடியை வலுக்கட்டாயமாக வெட்டியதுதான் அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

By admin