• Wed. Jun 11th, 2025

24×7 Live News

Apdin News

ராஜா ரகுவன்ஷி வழக்கு: மேகாலயா உள்பட 3 மாநில காவல்துறையின் மாறுபட்ட கூற்றுகள் என்ன?

Byadmin

Jun 10, 2025


மேகாலயா, ராஜா ரகுவன்ஷி, சோனா ரகுவன்ஷி
படக்குறிப்பு, ராஜா ரகுவன்ஷியும் சோனமும் மே 11ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு மேகாலயாவிற்கு மே 20ஆம் தேதி புறப்பட்டனர்.

மேகாலயாவின் கிழக்கு காசி மாவட்டம், உத்தரப் பிரதேசத்தின் காஸிபூர் மாவட்டத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது.

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியின் உடல் கிழக்கு காசி மலைகளில் ஜூன் 2ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் காணாமல் போன அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி காஸிபூரில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த வழக்கை பொறுத்தவரை மேகாலயா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் என மூன்று மாநில காவல்துறையினரும் வேறுவேறு கூற்றுகளை முன்வைக்கின்றனர்.

இந்தூரை சேர்ந்த ராஜா-சோனம் தம்பதி தங்களது தேனிலவுக்காக மேகாலயாவிற்கு சென்றிருந்தனர், பின்னர் அவர்கள் காணாமல் போன செய்தி வெளிவந்தது. இப்போது சோனம் ரகுவன்ஷி உத்தரப் பிரதேச போலீஸாரின் காவலில் இருக்கிறார். மேகாலயா காவல்துறையினர் அவருக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர், ஆனால் சோனத்தின் குடும்பத்தினர் அவர் அப்பாவி என்கின்றனர்.

ஆனால் சில கேள்விகளுக்கு இதுவரை பதில் கண்டுபிடிக்கப்படவில்லை.

By admin