• Wed. Jun 11th, 2025

24×7 Live News

Apdin News

ராஜேஷ்வரி: ஐஐடியில் சேரும் பழங்குடி மாணவி தமிழ் வழிக் கல்வி மூலம் சாதித்தது எப்படி?

Byadmin

Jun 10, 2025


பழங்குடி மாணவி, ஐ.ஐ.டி., ஜே.இ.இ. (அட்வான்ஸ்ட்), முக்கிய செய்திகள், பழங்குடி மக்கள்

பட மூலாதாரம், Mayakrishnan Kannan/BBC Tamil

சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற, பழங்குடியினத்தைச் சேர்ந்த, ராஜேஷ்வரி என்ற மாணவி ஜே.இ.இ. (அட்வான்ஸ்ட்) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பழங்குடியினருக்கான உண்டு உறைவிடப்பள்ளியில், தமிழ் வழியே படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவி என்ற சாதனையை படைத்துள்ளார் ராஜேஷ்வரி. JEE அட்வான்ஸ்ட் 2025 நுழைவுத்தேர்வில் பட்டியல் பழங்குடியினர் பிரிவில் 417- வது இடத்தைப் பிடித்துள்ளார் ராஜேஷ்வரி.

அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வுகளை எழுதி தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கான கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ராஜேஷ்வரி தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இவரின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



By admin