• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

ராஜ்கோட் சத்யாகிரகம்: சர்தார் படேலின் இயக்கத்துக்கு எதிராக நடந்த மன்னர்களின் சதி

Byadmin

Nov 13, 2025


ராஜ்கோட் சத்தியாகிரகம், வல்லபாய் படேல், மகாத்மா காந்தி

பட மூலாதாரம், Photo Divison

    • எழுதியவர், ஜெய் சுக்லா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆங்கிலேயர் காலத்தில் சௌராஷ்டிராவின் பல்வேறு சமஸ்தானங்களில் சில பிரஜா மண்டலங்கள் (மக்கள் குழுக்கள்) அல்லது பிரஜா பரிஷத்துகள் (மக்கள் சபைகள்) அல்லது பிரதிநிதி சபைகள் இருந்தன. இந்த பிரஜா மண்டலங்கள் சட்டமன்றங்களைப் போலச் செயல்படவில்லை.

ஆனால் பெரும்பாலும் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. சுதந்திரப் போராட்டத்தில் இணைவது தவிர, மக்களின் பிரச்னைகள் குறித்து மன்னரிடம் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன, மேலும் தீர்வு காணப்படாவிட்டால் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

சுதந்திரப் போராட்ட வீரர்களால் ‘கத்தியவார் அரசியல் சபை’ (Kathiyawad Rajkiya Parishad) நிறுவப்பட்டது. இந்தச் சபையின் மாநாடுகள் சௌராஷ்டிராவில் ஒன்பது இடங்களில் நடைபெற்றன. இந்த அரசியல் சபையை பெரும்பாலான சமஸ்தானங்கள் எதிர்த்தன.

எதிர்ப்புகள் இருந்தபோதிலும், ராஜ்கோட்டின் அப்போதைய ராஜா லாக்காஜிராஜ், 1921-ஆம் ஆண்டில் இந்தச் சபையின் முதல் மாநாடு ராஜ்கோட்டில் நடத்த அனுமதி அளித்தார்.

இந்தச் சபையின் முக்கிய நோக்கம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, அரசரின் செயல்பாடுகள் மக்கள் நலனுக்காக இருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதும்தான்.

By admin