• Fri. Jun 20th, 2025

24×7 Live News

Apdin News

ராணுவ நிதியை 20% அதிகரிக்கும் பாகிஸ்தான் – இந்தியாவுடனான மோதல் காரணமா? விளைவுகள் என்ன?

Byadmin

Jun 19, 2025


ஜெனரல் முனீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர்

பாகிஸ்தான் அரசு 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூன் 10 அன்று தாக்கல் செய்தது. அதில், பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை 20.2% அதிகரிப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் பொருள் அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்பு நிதியில் 428 பில்லியன் ரூபாய் (பாகிஸ்தானி) கூடுதலாக ஒதுக்கப்பட்டு 2,550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும்.

பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.97 சதவிகிதமாகும். இது மொத்த பட்ஜெட்டில் 14.5%.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, பாகிஸ்தான் அரசு அடுத்த நிதி ஆண்டுக்கான மொத்த மத்திய செலவில் ஏழு சதவிகிதம் குறைத்து ரூ.17.57 டிரில்லியன் என உச்சவரம்பு வைத்துள்ள நிலையில், பாதுகாப்பு பட்ஜெட் உயர்த்தப்பட்டுள்ளது.

By admin