• Sun. Aug 10th, 2025

24×7 Live News

Apdin News

ராமதாஸ் – அன்புமணி: சிசிடிவி வழியே ஊடுருவி வேவு பார்க்க முடியுமா? தொழில்நுட்ப சாத்தியமும் தடுக்கும் வழிகளும்

Byadmin

Aug 10, 2025


ராமதாஸ் - அன்புமணி, சிசிடிவி, வேவு பார்த்தல், ஒட்டுக்கேட்பு

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சிசிடிவி கேமராக்களை சிலர் ‘ஹேக்’ செய்திருந்ததாக, விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அவரது தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் வெளியில் உள்ள நபர்களுக்குச் சென்றடையும் வகையில் ஹேக் செய்யப்பட்டிருந்ததாக அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

வீட்டின் பாதுகாப்புக்காக பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவை ஹேக் செய்ய முடியுமா? தடுப்பதற்கான வழிகள் என்ன?

ராமதாஸ் தரப்பு புகார் விவரம்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு, தனது நாற்காலிக்கு அருகில் ஒட்டுக் கேட்கும் கருவியை சிலர் வைத்திருந்ததாக ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

By admin