• Sat. Oct 26th, 2024

24×7 Live News

Apdin News

ரா ஏஜென்ட்: விகாஷ் யாதவிற்கு முன்பு வெளிநாடுகளில் உளவாளிகளாக செயல்பட்டார்களா இவர்கள்? குற்றச்சாட்டு என்ன?

Byadmin

Oct 26, 2024


விகாஷ் யாதவ் விவகாரம்  - இதற்கு முன்னர் வெளிநாடுகளில் குற்றச்சாட்டப்பட்ட `ரா’ அதிகாரிகள்
படக்குறிப்பு, குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக விகாஷ் யாதவ் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது

கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்திய குடிமகன் விகாஷ் யாதவ் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 29 அன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தியில், ”வெள்ளை மாளிகையில் மோதியை, அதிபர் பைடன் வரவேற்கும் வேளையில், இந்திய உளவு அமைப்பான ‘ரா’ அதிகாரி ஒருவர் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்வதற்காக ஏவிய கூலிபடைக்கு ஆலோசனைகளை வழங்கினார். குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்காவில் மோதியை கடுமையாக விமர்சிப்பவர்.”என குறிப்பிட்டுள்ளது

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரகசிய தகவலின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த செய்தியின்படி, இந்திய ஏஜென்ட் விக்ரம் என்ற விகாஷ் யாதவ், பன்னுனின் நியூயார்க் முகவரியை கூலிப்படைக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், பன்னுனை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அப்போதைய ‘ரா’ தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் அளித்தார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin