• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

ரூ.167 கோடிக்கு ஏலம் போன யசோதா, கண்ணன் ஓவியம் – ராஜா ரவிவர்மா படைப்பின் தனித்துவம் என்ன?

Byadmin

Apr 6, 2026


 யசோதா மற்றும்  கிருஷ்ணா

பட மூலாதாரம், Saffronart

படக்குறிப்பு, ராஜா ரவிவர்மா 1890 களில் யசோதா மற்றும் கிருஷ்ணா ஓவியத்தை வரைந்தார்.

புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மாவின் 19-ஆம் நூற்றாண்டு ஓவியம் ஒன்று, ஏலத்தில் புதிய சாதனையைப் படைத்து இதுவரை விற்கப்பட்ட இந்தியக் கலைப்படைப்புகளிலேயே மிகவும் விலையுயர்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

‘யசோதா மற்றும் கிருஷ்ணா’ என்ற ஓவியம், புதன்கிழமை டெல்லியில் நடைபெற்ற சாஃப்ரான்ஆர்ட் ஏலத்தில் சுமார் 167 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இது கடந்த ஆண்டு எம்.எப். ஹுசைனின் ‘அன்டைட்டில்ட் – கிராம் யாத்ரா’ ஓவியம் ஈட்டிய சுமார் 118 கோடி என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.

விற்பனையிலும் சாதனைகளிலும் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி, இந்திய மற்றும் தெற்காசியக் கலைகளுக்கான அதிகரித்து வரும் தேவையைக் காட்டுகிறது.

தற்போதைய கேரள மாநிலத்தில் 1848ம் ஆண்டில் பிறந்த ரவி வர்மா, நவீன இந்திய ஓவியக்கலையின் முன்னோடியாகவும், துணைக்கண்டத்தின் மிகவும் செல்வாக்குமிக்க கலைஞர்களில் ஒருவராகவும் பரவலாகக் கருதப்படுகிறார்.

By admin