• Fri. Dec 5th, 2025

24×7 Live News

Apdin News

ரூ.17 லட்சம் மதிப்பிலான வைர நகையை திருடி, விழுங்கிய நபர் – காவல்துறை மீட்டது எப்படி?

Byadmin

Dec 5, 2025


நியூசிலாந்து, நகை திருட்டு, வைர நகை

பட மூலாதாரம், New Zealand Police

படக்குறிப்பு, இந்த நகையின் மதிப்பு சுமார் 19 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய்) இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் வைர நகையைக் களவாட முற்பட்டபோது அதை வாயில் போட்டு விழுங்கிய நபரிடம் இருந்து நகை மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஃபேபர்ஜி எக் லாக்கெட் எனப்படும் இந்த நகையின் மதிப்பு சுமார் 19,300 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய்) இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நகை இயற்கையான முறையில் மீட்கப்பட்டதாகவும் மருத்துவத் தலையீடு தேவைப்படவில்லை என்றும் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

கடந்த வாரம் மத்திய ஆக்லாந்தில் உள்ள பேட்ரிஜ் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் திருட முயன்ற 32 வயது நபரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். அப்போது அவர் தான் திருடிய அலங்காரப் பேழையை (locket) வாய்க்குள் போட்டு விழுங்கிவிட்டார்.

அந்த நகையில் 66 வெள்ளை வைரங்கள் மற்றும் 15 நீலமணிக் கற்கள் இடம்பெற்றிருந்ததாக நகை தயாரிப்பாளரின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் 18 கேரட் தங்கத்தால் ஆன மினியேச்சர் ஆக்டோபஸ் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

By admin