• Sun. Jun 15th, 2025

24×7 Live News

Apdin News

“ரூ.2,500 கொடுத்தால் போலீஸ் வேலை” – போலி காவல்நிலையம் நடத்தி ஏமாற்றிய இளைஞர்

Byadmin

Jun 11, 2025


காவல்நிலையம், அரசு வேலை, பிகார் மோசடி

பட மூலாதாரம், Pankaj Yadav

படக்குறிப்பு, பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கிராம தலைவரும் கெளரவித்தார்

பிகாரின் பூர்னியா மாவட்டத்தில் போலி காவல்நிலையத்தை தொடங்கி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

காவல் நிலையத்தின் முகாம் அலுவலகத்தை தொடங்கி, பயிற்சியும் வேலையும் அளிப்பதாக கூறி மோசடி நடைபெற்றிருப்பது மாவட்டத்தின் மொஹானி பஞ்சாயத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிகார் கிராம் ரக்‌ஷா தள் மற்றும் ஹோம் கார்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி டிசம்பர் 2024 மற்றும் ஜனவரி 2025 இடையே இந்த பயிற்சி நடைபெற்றிருக்கிறது.

ஆனால், பூர்னியா காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேய கே. ஷர்மா, “போலி காவல்நிலையம் என்ற நிகழ்வு இல்லை. கிராம் ரக்‌ஷா தள்க்கு பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் 30 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. முக்கிய குற்றவாளியாக கூறப்படும் ராகுல் குமார் ஷா இந்த பிகார் கிராம் ரக்‌ஷா தள்-உடன் தொடர்புடையவர்.”

By admin