• Sun. Feb 22nd, 2026

24×7 Live News

Apdin News

ரோபோடிக்ஸ்: அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை என்ன?

Byadmin

Feb 22, 2026


ரோபோடிக்ஸ், டெல்லி ஏஐ மாநாடு, சீனா, அமெரிக்கா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 18 அன்று டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ மாநாட்டில் ஜியோ ரோபோ காட்சிப்படுத்தப்பட்டது

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமான கல்கோடியாஸ் பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு மாநாட்டின்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு ரோபோவை காட்டி, அது தனது சொந்த உருவாக்கம் எனக் கூறியது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருப்பினும், பின்னர் அந்த ரோபோவை தாங்கள் உருவாக்கியதாகக் கூறவில்லை என்று அந்தப் பல்கலைக்கழகம் கூறியது.

இதற்கிடையே, ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் துறையில் இந்தியா எந்த நிலையில் உள்ளது, இந்தத் துறையில் முன்னேறப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பன குறித்தும் விவாதம் நடக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகள் துறையில் உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் அமெரிக்கா மற்றும் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் தற்போது முன்னணியில் உள்ளன. இப்போது விவசாயம் முதல் மருத்துவம் மற்றும் உற்பத்தி வரை ஒவ்வொரு துறையிலும் ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன.

By admin