• Mon. May 26th, 2025

24×7 Live News

Apdin News

லாலு பிரசாத் யாதவ் அதிரடி: மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை நீக்கியது ஏன்?

Byadmin

May 26, 2025


லாலு பிரசாத் யாதவ் தனது மகனை கட்சி மற்றும் குடும்பத்திலிருந்து நீக்கியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேஜ் பிரதாப் யாதவ்

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி)கட்சியின் தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது மூத்த மகனும் எம்.எல்.ஏ.வுமான தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கியுள்ளார்.

தனது மூத்த மகனின் (தேஜ் பிரதாப்) “செயல்பாடுகள், பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற செயல்கள் எங்கள் குடும்ப விழுமியங்கள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப இல்லை” என்று ஞாயிற்றுக்கிழமையன்று லாலு பிரசாத் யாதவ் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சனிக்கிழமையன்று, தேஜ் பிரதாப் யாதவின் பேஸ்புக் கணக்கிலிருந்து ஒரு படம் வெளியிடப்பட்டது. இருப்பினும், அந்த புகைப்படம் சில மணி நேரங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது சமூக ஊடக கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், எடிட் செய்யப்பட்ட புகைப்படம் மூலம் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் சனிக்கிழமை இரவு தனது எக்ஸ் பக்கத்தில் தேஜ் பிரதாப் யாதவ் பதிவிட்டார்.

By admin