• Tue. Oct 21st, 2025

24×7 Live News

Apdin News

லூவர்: பிரான்ஸில் நெப்போலியன் காலத்து நகைகள் சில நிமிடத்தில் திருடப்பட்டது எப்படி?

Byadmin

Oct 21, 2025


பிரான்சின் கலைப் பொருட்களை குற்றக் கும்பல்கள் குறிவைப்பது அதிகரித்துள்ள இந்த நேரத்தில், பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை இச்சம்பவம் எழுப்புகிறது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 1789 புரட்சிக்குப் பிறகு, பிரான்சின் பெரும்பாலான அரச நகைகள் காணாமல் போனது அல்லது விற்கப்பட்டது. சில முக்கிய பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டன.

1911-ல் மோனாலிசா ஓவியம் திருடப்பட்ட பிறகு, லூவர் அருங்காட்சியகத்தில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் தற்போது நடந்துள்ளது.

பிரான்சின் கலைப் பொருட்களை கொள்ளைக் கும்பல்கள் குறிவைப்பது அதிகரித்துள்ள இந்த நேரத்தில், பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை இச்சம்பவம் எழுப்புகிறது.

பிரான்சின் புதிய உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், ஞாயிற்றுக்கிழமை காலை அப்போலோ கேலரிக்குள் நுழைந்த கும்பல் தொழில்முறை நுட்பம் வாய்ந்தவர்கள் என்றார்.

அவர்கள் தெளிவாகத் திட்டமிட்டு, முன்கூட்டியே “இந்த இடத்தை நன்கு ஆய்வு” செய்திருந்தனர். எளிமையான ஆனால் செயல்திறன் வாய்ந்த திட்டத்தை பயன்படுத்தினர். வெறும் 7 நிமிடங்களில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.



By admin