• Wed. Sep 17th, 2025

24×7 Live News

Apdin News

வக்ஃப் சட்டம்: உச்ச நீதிமன்றம் சில தடைகளை விதித்தபோதிலும் இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி ஏன்?

Byadmin

Sep 17, 2025


வக்ஃப் திருத்தச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

2025-ஆம் ஆண்டின் வக்ஃப் திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு தடை விதித்திருக்கும் உச்ச நீதிமன்றம், முழுமையான தடையை விதிக்க மறுத்திருக்கிறது. இதனை அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ளன. ஆனால், இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரை நீதிமன்றம் அனுமதித்திருக்கும் சில பிரிவுகள் பாரபட்சமாக இருப்பதாக குற்றம்சாட்டுகின்றன.

இஸ்லாமிய மத தொண்டுக்காக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகள் தற்போது 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தின்படி நிர்வகிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தை திருத்தும் வகையில் மத்திய அரசு ஒரு திருத்தச் சட்டத்தை 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

சமத்துவமின்மையை நீக்குவது, பாலின சமத்துவத்தை அறிமுகம் செய்வது, மாநில வக்ஃப் வாரியங்களில் பல்வேறு இஸ்லாமியப் பிரிவனருக்கும் பிரதிநிதித்துவம் தருவது உள்ளிட்ட நோக்கங்களோடு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு கூறியது.

இந்தச் சட்டம் வக்ஃப் சொத்துகளை பதிவு செய்வது, தணிக்கை செய்வது, கணக்குகளை கண்காணிப்பது தொடர்பான விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்தது. வக்ஃப் தீர்ப்பாயங்கள் வழங்கும் தீர்ப்புகளை எதிர்த்து, 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தை நாடவும் இந்தச் சட்டம் அனுமதித்தது.

By admin