• Wed. Nov 19th, 2025

24×7 Live News

Apdin News

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

Byadmin

Nov 19, 2025


தமிழ்நாடு, வானிலை, கனமழை எச்சரிக்கை, காற்றழுத்த தாழ்வு நிலை, வடகிழக்கு பருவமழை, வங்கக்கடல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நவம்பர் 22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை (நவம்பர் 19-ஆம் தேதி) மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று காலை 08:30 மணி முதல் இரவு 07:30 மணி வரையில் அதிகபட்சமாக தென்காசியில் 6.4 செமீ மழையும் திருநெல்வேலியில் 2.7 செமீ மழையும் திருவாரூரில் 2.6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

நாளை தென் தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கரையை ஒட்டிய பகுதிகளில் 40 – 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் காற்று 60 கிமீ வரை செல்லக்கூடும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

By admin