• Sat. Oct 25th, 2025

24×7 Live News

Apdin News

வங்கக்கடலில் புயல் எப்போது உருவாகும்? இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

Byadmin

Oct 25, 2025


தமிழ்நாடு, வானிலை, புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருப்பதை காட்டும் வரைபடம். (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து)

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 6 மணி நேரமாக மேற்கு நோக்கி நகர்ந்தது. இன்று (அக்டோபர் 25) அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறக்கூடும். இது, 26-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27-ஆம் தேதி காலை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக மாறக்கூடும்.

தமிழ்நாடு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழ்நாடு, வானிலை, புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி & கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

அக்டோபர் 25

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம்.



By admin