• Fri. Dec 19th, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறும் தலைவர்கள் : 1971 போர் குறித்து விவாதிக்கப்படுவது ஏன்?

Byadmin

Dec 19, 2025


தௌஹீத் ஹுசைன், வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தௌஹீத் ஹுசைன், வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகர்

இந்திய உயர் ஆணையரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, வங்கதேசத்தின் தேசியக் குடிமக்கள் கட்சியின் தெற்குப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஹஸ்னத் அப்துல்லா குமில்லா-4 தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

புதன்கிழமை குமில்லாவின் தேபித்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹஸ்னத் அப்துல்லா, டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையரை இந்திய வெளியுறவுத் துறை நேரில் அழைத்து விளக்கம் கேட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். “இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கு நாம் கடும் எதிர்வினையாற்றி இருக்க வேண்டும். ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்து வருவதால், இந்திய உயர் ஆணையரை நமது நாட்டை விட்டு வெளியேற்றி இருக்க வேண்டும்,” என்றார்.

புதன்கிழமை டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணைத்தின் பாதுகாப்பு குறித்து தனது கவலையைத் தெரிவிக்க, டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையரை ரியாஸ் ஹமிதுல்லாவை அழைத்து இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் கேட்டிருந்தது.

இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஹஸ்னத் கூறினார்.

By admin