• Thu. Jan 1st, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசத்தில் காலிதா ஜியா மகன் – ஜெய்சங்கர் சந்திப்பு: இந்தியாவின் நகர்வு உணர்த்துவது என்ன?

Byadmin

Jan 1, 2026


வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் புதன்கிழமை டாக்கா சென்றடைந்தார்.

பட மூலாதாரம், @hamidullah_riaz

படக்குறிப்பு, காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் புதன்கிழமை டாக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சுமுகமான சூழல் இல்லாத நிலையில் அமைச்சரின் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டாக்காவில் காலிதா ஜியாவின் மகனும் வங்கதேச தேசியவாதக் கட்சியின்( பிஎன்பி) நிர்வாகத் தலைவருமான தாரிக் ரஹ்மானை எஸ். ஜெய்சங்கர் சந்திக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

மற்றொரு புறம், பாகிஸ்தான் தனது நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக்கை அஞ்சலி செலுத்துவதற்காக டாக்காவுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வந்த காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வங்கதேசம் திரும்பிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை அன்று காலிதா ஜியா காலமானார்.

ஜெய்சங்கரின் இந்தப் பயணம், வங்கதேசத்துடனான இந்தியாவின் வருங்கால உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

By admin