• Thu. Jan 1st, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசத்தில் பாகிஸ்தான் சபாநாயகரை சந்தித்த ஜெய்சங்கர்: வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுவது என்ன?

Byadmin

Jan 1, 2026


வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ், ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக்

பட மூலாதாரம், @ChiefAdviserGoB

படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ், ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் ஆகியோரின் படத்தை சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ளார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கை குலுக்கியதாக பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி கூறியுள்ளது.

இருவரும் கைகுலுக்கும் புகைப்படத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவையான பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி தனது எக்ஸ் சமூக ஊடகத் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மே 2025 மோதலுக்குப் பிறகு இந்தியாவின் முதல் “உயர்மட்டத் தொடர்பு முயற்சி” இது என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

காலிதா ஜியாவின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக சில சர்வதேசத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது, இந்திய வெளியுறவு அமைச்சர் முன்வந்து பாகிஸ்தான் நேஷனல் அசம்ப்ளி சபாநாயகருடன் கைகுலுக்கியதாக வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான ‘புரோதோம் அலோ’ கூறியுள்ளது.

எஸ். ஜெய்சங்கர், காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானுடனான தனது சந்திப்பு குறித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார், ஆனால், அயாஸ் சாதிக்குடனான சந்திப்பு பற்றி அவர் எதையும் குறிப்பிடவில்லை.

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா, நீண்ட கால உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை தனது 80வது வயதில் காலமானார்.

By admin