• Mon. Feb 23rd, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அலுவலகங்களை திறக்க முயற்சி – உணர்த்துவது என்ன?

Byadmin

Feb 23, 2026


ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி ஆகஸ்ட் 5, 2024 அன்று இந்தியா வந்தார்.

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, ஆங்காங்கே அவாமி லீக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் கட்சி அலுவலகங்களுக்குள் நுழைய முயல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல இடங்களில் அவர்கள் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் கட்சியின் உத்தரவின் பேரில் இவ்வாறு செய்கிறார்களா அல்லது தன்னிச்சையாகச் செய்கிறார்களா, அல்லது இதன் பின்னணியில் ஆளும் பிஎன்பி ஜமாத்-இ-இஸ்லாமி அல்லது வேறு எவருடனாவது ஏதேனும் ஒப்பந்தம் உள்ளதா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

2024 ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட பிறகு, பேராசிரியர் முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கம் அவாமி லீக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. இதனால், அண்மையில் நடந்த தேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிட முடியவில்லை.

இருப்பினும், தேர்தல் முடிந்த உடனேயே டாக்கா உள்ளிட்ட பல இடங்களில் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அவாமி லீக் அலுவலகங்களைத் திறந்தனர் அல்லது அவற்றுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.

அவாமி லீக்கின் மத்திய அலுவலகம்
படக்குறிப்பு, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு அவாமி லீக்கின் மத்திய அலுவலகம் (கோப்புப் படம்)

சில இடங்களில், அலுவலகங்கள் திறக்கப்படுவதற்கு எதிர்வினையாக தாக்குதல்களும் நடைபெற்றன. இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

By admin