• Sat. Jan 3rd, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசப் பயணத்தில் இடைக்கால அரசுத் தலைவர் யூனுஸை சந்திக்காத ஜெய்சங்கர் – பின்னணி என்ன?

Byadmin

Jan 3, 2026


தௌஹித் உசேன்-ஜெய்சங்கர்

பட மூலாதாரம், @hamidullah_riaz

படக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகர் தௌஹித் ஹுசைனும் ஜெய்சங்கரும் சந்தித்துக்கொண்டனர்

    • எழுதியவர், சஜல் தாஸ்
    • பதவி, பிபிசி

வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவர் காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்த வங்கதேசம் சென்றிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகருக்கும் இடையே முறையான சந்திப்பு எதுவும் நடைபெறாதது குறித்து பல விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்திய அரசாங்கம் அனுப்பிய இரங்கல் செய்தியின் மொழி நடை குறித்தும் பரவலாகப் பேசப்படுகின்றது.

காலிதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு, பல நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தவிர, பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக், பூட்டான் வெளியுறவுத்துறை அமைச்சர், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மாலத்தீவு கல்வி அமைச்சர் ஆகியோரும் வங்கதேசம் சென்றடைந்தனர்.

வருகை தந்த தலைவர்களில் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ் முறையான சந்திப்புகளை நடத்தினார் என தலைமை ஆலோசகரின் ஊடகப் பிரிவு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த தகவல்கள் கூறுகின்றன.

By admin