• Fri. Dec 26th, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேசம் உடனான உறவைப் பேணுவதில் இந்தியா எங்கே தவறு செய்தது?

Byadmin

Dec 26, 2025


வங்கதேசத்தில் இந்தியா தவறவிட்ட இடங்கள் - ஐசிஜியின் அறிக்கை மற்றும் நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூலை மாதத்தில், வங்கதேச மக்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடினர்.

இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஷேக் ஹசீனா தனது உயிரைக் காப்பற்றிக் கொள்ள இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

வங்கதேசத்தின் நிறுவனரான ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான், இந்தியாவுடன் வரலாற்று ரீதியான உறவைக் கொண்டிருந்தவர். ஷேக் ஹசீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவும் அதே தொடர்ச்சியைக் கொண்டிருந்தது.

இருப்பினும், வங்கதேசத்தின் எதிர்க்கட்சிகளும் ஷேக் ஹசீனாவின் எதிர்ப்பாளர்களும், இந்தியாவின் ஆதரவுடனேயே அவர் அதிகாரத்தில் நீடித்ததாக நம்பினர்.

By admin