• Thu. Sep 11th, 2025

24×7 Live News

Apdin News

வங்கதேசம், நேபாளம்: அண்டை நாடுகளில் குழப்பத்தால் இந்தியாவுக்கு நெருக்கடி

Byadmin

Sep 11, 2025


 எல்லையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளை இந்தியா மிக நெருக்கமாகக் கவனித்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, வேகமாக எதிர்வினையாற்றுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவும் நேபாளமும் வரலாற்று ரீதியாகப் பகிரப்பட்ட வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன .

    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, உலக விவகார செய்தியாளர்

சமீபத்திய ஆண்டுகளில் எழுச்சியால் தனது அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது நெருங்கிய அண்டை நாடாக நேபாளம் மாறியுள்ளது.

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், காவல்துறையினருடனான மோதல்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததுடன், பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயற்சிக்கிறது.

By admin