• Thu. Jan 1st, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசம்: ரகசியமாக புதைக்கப்பட்ட காலிதா ஜியா கணவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறுஅடக்கம் செய்யப்பட்ட கதை

Byadmin

Jan 1, 2026


காலிதா ஜியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலிதா ஜியா காலமானார்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவருமான காலிதா ஜியா, டாக்காவின் ஷெர்-இ-பங்களா நகரில் உள்ள அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

வங்கதேசத்தின் முன்னாள் அதிபரும் விடுதலைப் போரின் போது முக்கிய தளபதியாக இருந்தவருமான ஜியாவுர் ரஹ்மான், 1981 மே 30 அன்று சிட்டகாங்கில் படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பிறகு அவரது உடல் முதலில் சிட்டகாங்கின் ரங்குனியா மலைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னர், அப்போதைய அரசாங்கத்தின் முயற்சியின் பேரில், அவரது உடல் டாக்காவிற்கு கொண்டு வரப்பட்டு, அப்போதைய ஷெர்-இ-பங்களா பூங்காவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னர், ஹுசைன் முகமது எர்ஷாத் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், ஷெர் -இ-பங்களா நகரில் நாடாளுமன்றத்தை ஒட்டிய இந்தப் பூங்கா ‘சந்திரிமா உதயன்’ என்று பெயரிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிஎன்பி அரசாங்கம் அதன் பெயரை ‘ஜியா உதயன்’ என்று மாற்றியது.

By admin