• Mon. Feb 9th, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேச இளைஞர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு அதிகரித்துள்ளதா?

Byadmin

Feb 9, 2026


ஒரு காலத்தில் வங்கதேச ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்ந்த ஹசீனா, பிறகு சர்வாதிகாரப் போக்குடையவராக மாறிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் பதவி விலகிய பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி டாக்காவில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி

டாக்கா பல்கலைக்கழகத்தின் சுவர்கள் மீண்டும் பரபரப்பாக இருக்கின்றன.

கோபம், நகைச்சுவை மற்றும் கவித்துவமான சுவரோவியங்கள், சுவர்களிலும் தாழ்வாரங்களிலும் பரவிக் கிடக்கின்றன. ஷேக் ஹசீனாவின் 15 கால ஆட்சிக்கு முடிவு கட்டிய ஜூலை 2024-ன் ‘ஜென் ஸி ‘ மாணவர் எழுச்சியை அவை எதிரொலிக்கின்றன.

ஒரு காலத்தில் வங்கதேச ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்ந்த ஹசீனா, பிறகு சர்வாதிகாரப் போக்குடையவராக மாறிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் பதவி விலகிய பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

மாணவர்கள் குழுக்களாகத் திரண்டு அரசியல் விவாதம் செய்கின்றனர். ஒழுங்குபடுத்தப்படாத புல்வெளியில், சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகச் சிவப்பு விளக்குகள் தொங்கவிடப்பட்டுள்ளன. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தங்களின் செல்வாக்கை நிலைநாட்டப் போட்டி போடும் சூழலில், இது சிறிய ஆனால் முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இங்குள்ள பலருக்கு, பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ள தேர்தல் தான் முதல் உண்மையான வாக்குப்பதிவு அனுபவமாக இருக்கும்.

By admin