உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வங்கித் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ. 10 கோடி பணத்தை நேர்மையுடன் திரும்ப ஒப்படைத்த பாராட்டுகளை குவித்து வருகிறது.
மைன்புரி மாவட்டம், தேவ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த ரீதா, எளிய விவசாயியான தனது கணவருடன் வசித்து வருகிறார்.
அண்மையில் தனது வங்கித் கணக்கின் இருப்பைச் சரிபார்க்க ஏடிஎம் சென்றுள்ளார். கணக்கில் ரூ. 9,99,49,588 (சுமார் 10 கோடி ரூபாய்) இருப்பு இருப்பதாகக் காட்டியது.
சந்தேகம் அடைந்த அவர், மற்றொரு ஏடிஎம்-மிலும் சரிபார்த்துள்ளார். அங்கும் அதே தொகை காட்டியுள்ளது.