• Mon. Nov 24th, 2025

24×7 Live News

Apdin News

“வங்கி பெயரில் போலி ஆப் மூலம் மோசடி” – கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

Byadmin

Nov 24, 2025


சைபர் குற்றம், இணையக் குற்றம், போலி செயலிகள்

பட மூலாதாரம், Getty Images

பண பரிவர்த்தனைகள் முதல் பங்குச் சந்தை வர்த்தகம் வரை இன்று அனைத்தையும் ஒரு மொபைல் போன் இருந்தால் விரல் நுனியிலே செய்துவிட முடிகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய துரித உலகில் அவற்றுக்கு இணையாக மோசடிகளும் அதிகரித்துள்ளன. போலியான செயலிகளைப் பயன்படுத்தி பயனர்களின் தனிப்பட்ட தரவுகள், வங்கித் தகவல்கள் என முக்கியமான விவரங்களை திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

அத்தகைய முயற்சி ஒன்று சமீபத்தில் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. தொலைக்காட்சி ஊடக நிருபர் ஒருவரின் வாட்ஸ்ஆப் கணக்கு மூலம் ஹேக்கர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் போலியான செயலி ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

பல அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் அலுவலர்கள் நடத்தி வரும் அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் கணக்குகளில் அந்த செய்தி பகிரப்பட்டுள்ளது.

அதில் எஸ்பிஐ செயலியை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வதற்கான இணைப்பும் ஏபிகே வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களின் ஆதார் தகவல்களை பதிவிடுமாறும் அந்தச் செய்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

By admin