• Sun. Mar 16th, 2025

24×7 Live News

Apdin News

வடக்கு மாசிடோனியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

Byadmin

Mar 16, 2025


வடக்கு மாசிடோனியா, தீவிபத்து, இரவு விடுதி

பட மூலாதாரம், SOCIAL MEDIA

வடக்கு மாசிடோனியாவில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,155க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ஸ்கோப்ஜேவிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி(Kocani) என்ற இடத்தில் உள்ள பல்ஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகள் கட்டடம் தீப்பிடித்து எரிவதையும், இரவு வானத்தில் புகை பரவுவதையும் காட்டுகின்றன.

வடக்கு மாசிடோனியா, தீவிபத்து, இரவு விடுதி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சேனல் 5 தொலைக்காட்சி ஊடகத்துக்கு பேட்டியளித்த மரிஜா டசேவா எனும் 20 வயதான பெண் கூறுகையில், விபத்து ஏற்பட்டவுடன் அனைவரும் வெளியே செல்ல முயன்றதால், நெரிசலில் சிக்கிக் கொண்டதாகவும் பின்னர் எப்படியோ வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

By admin