• Mon. Sep 15th, 2025

24×7 Live News

Apdin News

வடபழனி முருகன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அக்.13-ம் தேதி கடைசி நாள் | Student admission in Vadapalani Murugan Temple Odhuvar Training School

Byadmin

Sep 15, 2025


சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் ஓது​வார் பயிற்​சிப் பள்​ளி​யில் பகு​திநேர வகுப்​புக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது. இதற்கு அக்​.13-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

முரு​கன் கோயில்​களில் தொன்​மை​யான தென்​பழனிக்கு நிக​ராக சென்னை வடபழனி​யில் அமைந்​துள்ள முரு​கன் கோயில் புகழ்​பெற்று விளங்​கு​கிறது. இக்​கோயி​லில் தினசரி ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசித்து வரு​கின்​றனர். ஏராள​மான பக்​தர்​கள் காவடி எடுத்​து, அலகு குத்தி வேண்​டு​தல் நிறைவேற்​றும் தலமாக​வும் திகழ்​கிறது.அறநிலை​யத்​துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள இக்​கோ​யில் சட்​டப்​பிரிவு, 46(3)ன் கீழ் பட்​டியலை சேர்ந்​தது. துணை ஆணை​யர், செயல் அலு​வலர் நிலை​யிலும், தக்​கா​ராலும் நிர்​வாகம் கவனித்து வரப்​படு​கிறது.

இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் இந்த நிதி​யாண்​டுக்​கான மானியக்​ கோரிக்கை அறி​விப்பு படி, திரு​முறை​களை குறை​வின்றி ஓதிட ஏது​வாக இக்​கோயி​லில் புதி​ய​தாக ஓது​வார் பயிற்​சிப் பள்ளி பகுதி நேர வகுப்​பாக தொடங்​கப்​படு​கிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: ஓது​வார் பயிற்சி பள்​ளி​யில் பயிற்சி காலம் நான்கு ஆண்​டு​கள். பகு​தி நேர வகுப்​பு​கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை அல்​லது இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்​தப்பட உள்​ளது. மேலும், வார விடு​முறை நாட்​களான சனி, ஞாயிற்றுக் கிழமை​களில் முழுநேர வகுப்​பு​கள் நடத்​தப்பட உள்​ளது. இந்த ஓது​வார் பயிற்​சிப் பள்​ளி​யில் சேர விரும்​பும் மாணவ, மாண​வியருக்கு 14 வயது முதல் 24 வயதுக்​குள் இருக்க வேண்​டும். குறைந்​த

பட்​சம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்​றிருக்க வேண்​டும்.

ஓது​வார் பயிற்சி பெற விரும்​புவோர் இந்து மதத்தை சேர்ந்​தவர்​களாக இருக்க வேண்​டும். சமயக் கோட்​பாடு​களை கடைபிடிப்​பவர்​களாக இருக்க வேண்​டும். இந்த பயிற்சி வகுப்​பில் படிப்​பவர்​களுக்கு ஒவ்​வொரு மாத​மும், ரூ.5,000 ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும். இயற்​கை​யாகவே சாரீர​மும், உடல் வளமும் பெற்​றிருத்​தல் வேண்​டும். பெற்​றோர், பாது​காவலர் ஆகியோரை கொண்டு உடன்​படிக்கை செய்​து கொள்ள வேண்​டும். விண்​ணப்​பிக்க விரும்​பும் தகு​தி​யானோர் வடபழனி முரு​கன் கோயி​லில் நேரிலோ, இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் www.tnhrce.gov.in மற்​றும் www.vadapalaniandavar.hrce.tn.gov.in என்ற இணையதளத்​திலோ விண்​ணப்​பங்​களை பதி​விறக்​கம் செய்​து கொள்​ளலாம்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​களை உரிய சான்​றிதழ்​களு​டன் வரும் அக்​.13-ம் தேதிக்​குள் துணை ஆணை​யர்/ செயல் அலு​வலர், வடபழனி முரு​கன் கோயில், வடபழனி, சென்​னை-600 026 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



By admin