• Wed. Nov 26th, 2025

24×7 Live News

Apdin News

‘வட சென்னையே விஷ நகரமாகும்’ – எரி உலை திட்டத்தை எதிர்க்கும் கொடுங்கையூர் மக்கள்

Byadmin

Nov 26, 2025


காணொளிக் குறிப்பு,

‘வட சென்னையே விஷ நகரமாகும்’ – எரி உலை திட்டத்தை எதிர்க்கும் கொடுங்கையூர் மக்கள்

மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சமீபத்தில் குப்பைகளை மேலாண்மை செய்வதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, பொது உள்ளாட்சி திடக்கழிவு மேலாண்மை வசதி (Common Municipal Solid Waste Management Facility, CMSWMF) எனப்படும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான வரைவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னை கொடுங்கையூரில் திட்டமிடப்பட்டுள்ள எரிஉலை தங்கள் விருப்பத்தை மீறி வந்துவிடுமோ என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கையே அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டுமெனக் கோருகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin