0
பாகிஸ்தானுக்கு 3.4 பில்லியன் டொலர் வணிகக் கடன்களை சீனா வழங்கியுள்ளது.
இது சமீபத்திய வணிக மற்றும் பலதரப்பு கடன்களுடன் சேர்ந்து பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி இருப்புக்களை 14 பில்லியன் டொலராக உயர்த்தும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங் கடந்த மூன்று ஆண்டுகளாக பாகிஸ்தானின் மத்திய வங்கியின் இருப்புக்களில் இருந்த 2.1 பில்லியன் டொலரை செலுத்தியுள்ளது.
அத்துடன், இஸ்லாமாபாத் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பிச் செலுத்திய 1.3 பில்லியன் டொலர் வணிகக் கடனை மறு நிதியளித்தது என்றும் பாகிஸ்தான் நிதி அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வணிக வங்கிகளிடமிருந்து மற்றொரு 1 பில்லியன் டொலரும், பலதரப்பு நிதியிலிருந்து 500 மில்லியன் டொலரும் பெறப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, “இது எங்கள் இருப்புக்களை IMF இலக்குக்கு ஏற்ப கொண்டு வருகிறது” என்றும் பாகிஸ்தான் நிதி அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது.